×

கொடைக்கானலில் ஓய்வு முடிந்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொடைக்கானலில் ஓய்வை முடித்துக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் கடந்த ஏப். 19ல் நடந்தது. இதற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். காலை நடைபயிற்சியின்போது வாக்கு சேகரிப்பு, உழவர்சந்தைகளில் பிரசாரம், பொதுமக்களுடன் சந்திப்பு, மாலையில் பொதுக்கூட்டம் என நாள் முழுவதும் ஓய்வின்றி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தாலும் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால், கோடை வெயில் காலத்தில் ஓய்வெடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் கடந்த 29ம் தேதி கொடைக்கானலுக்கு சென்றார். கொடைக்கானல் பாம்பார்புரம் தனியார் விடுதியில் தங்கிய முதல்வர், கடந்த 30ம் தேதி கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்குப் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

பின்னர் அங்கிருந்த மைதானத்தில் கோல்ப் விளையாடினார். அப்போது கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஓய்வு எடுத்த முதல்வர் நேற்று மாலை 3.40 மணியளவில் கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு காரில் கிளம்பினார். மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் 6.45 மணி புறப்பட்ட விமானம் மூலம் இரவு 8 மணிக்கு சென்னை வந்தடைந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முதல்வரை அரசு அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் சந்திக்கவில்லை.

The post கொடைக்கானலில் ஓய்வு முடிந்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Kodaikanal ,M.K.Stalin ,Tamil Nadu ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...